கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்தது. இதனால் அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரசாயனம் கலந்த வெப்பத் தண்ணீர் புகுந்து 19 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் சிப்காட் தொழில் பேட்டையில் குடிகாடு கிராமம் அருகே தனியார் சாயப்பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று ( மே.15) அதிகாலை சுமார் 2 மணி அளவில் சாயப்பட்டறை கம்பெனியில் உள்ள ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரசாயன கழிவு நீர் பாய்லர் டேங்க் அதிக வெப்பத்தினால் வெடித்தது.