பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை: வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

2 months ago 15

சென்னை: வாடகை வாகன ஓட்டுநர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக உரிமைக் குரல் ஓட்டுநர் சங்க பொதுச்செயலாளர் அ.ஜாஹிர்உசேன், தலைவர் இ.சே.சுரேந்தர் ஆகியோர் கூறியதாவது: தனியார் செயலி மூலம் இயங்கும் பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களால் வாடகை வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்நிறுவனங்களின் கீழ் வாகனங்களை ஓட்டும்போது ரூ.2 ஆயிரம் சம்பாதித்தால் ரூ.400 கமிஷனாகவும், ரூ.100 ஜிஎஸ்டி வரியாகவும் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆட்டோக்களுக்கு கி.மீட்டருக்கு ரூ.11 மட்டுமே வழங்கப்படுகிறது. சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அதிக பாரத்தை ஏற்றிச் செல்ல வற்புறுத்துகின்றன.

Read Entire Article