பாப்பிரெட்டிப்பட்டி, நவ.23: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்.முருகன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் கெளரிசங்கர், ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கண்காணிப்பாளர் பழனிச்சாமி, உதவியாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் நீலா வரவேற்றார். கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், பிரசவித்த தாய்மார்கள் 122 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் appeared first on Dinakaran.