பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ தொடர்பான வழக்கையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஆணை

2 weeks ago 2

சென்னை: சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியானது தொடர்பான வழக்கையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. அரசின் காவல் ஆய்வாளர் ராஜு உள்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான அனுமதியை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்ய, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

The post பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ தொடர்பான வழக்கையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article