பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: தமிழக அரசு பள்ளிகளில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படுகிறதா? - ஐகோர்ட்

2 hours ago 1

மதுரை: பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கள் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வழக்கறிஞர் சங்க உறுப்பினர் சப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணைபடி பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் பள்ளிக் கல்வி இயக்குநர், சைபர் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு அதிகாரிகள், தலா 2 கல்வியாளர்கள், உளவியலாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கவும், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், பெற்றோர், நிர்வாக பிரதிநிதிகள், ஆசிரியர் அல்லாத அலுவலர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

Read Entire Article