
பார்சிலோனா,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்று உள்ளனர். கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் ஆர்தர் பில்ஸ் முன்னிலை பெற்றார்.
அப்போது சிட்சிபாஸ் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீரென அறிவித்தார். இதையடுத்து ஆர்தர் பில்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஆர்தர் பில்ஸ், கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோத உள்ளனர்.