பாம்பு கடித்து கட்டிட மேஸ்திரி பலி

2 months ago 11

செங்கல்பட்டு: மகேந்திராசிட்டி அருகே கட்டிட மேஸ்த்திரி பாம்பு கடித்ததில் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சுரேஷ் (36). இவர், செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி அடுத்த அஞ்சூர் கிராமத்தில் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் தற்காலிகமாக வாடகைக்கு அறையெடுத்து அங்கு தங்கி வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு சுரேஷ் அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனே கடித்தது என்னவென்று பார்த்தபோது அவரது அறையில் இருந்து பாம்பு ஒன்று சென்றது கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்ததும் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த ஒரு வாரமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுரேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரகாலமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

The post பாம்பு கடித்து கட்டிட மேஸ்திரி பலி appeared first on Dinakaran.

Read Entire Article