ராமேஸ்வரம்: பாம்பனில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் ஓர் பொறியியல் அற்புதம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இன்று (ஏப்.6) பிரதமர் நரேந்திர மோடி, கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.