நாமக்கல், ஜன. 21: ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் தாலுகா வடுகம் ஊராட்சி முனியப்பம்பாளையத்தில் இருந்து கைலாசம்பாளையத்திற்கு பாதை இருந்தது. இந்த பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, இந்த பாதையை மீட்டு தரவேண்டும். பொது பாதையை அழித்த நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
The post பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.