புலந்த்சாஹர்: உத்தரப்பிரதேசத்தின் சிகந்தராபாத் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பைக்கில் இரண்டு பேர் பெட்ரோல் வாங்குவதற்காக வந்தனர். அவர்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதற்கு ஊழியர் மறுத்த நிலையில் இருவரும் பங்க் மேலாளரை அணுகியுள்ளனர். அவரும் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிதரமுடியாது என மறுத்துள்ளார். இதனால் மேலாளருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மேலாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி மூலமாக குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் எடாவாவில் மோதி கிராமத்தில் உள்ள பார்தனா கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஓம் பிரகாஷ்(72) வயலில் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அடையாளம் தெரியாத சிலர் ஓம் பிரகாஷ் மீது துப்பாக்கி யால் சுட்டுக் கொன்றனர்.
The post பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு பெட்ரோல் பங்க் மேலாளர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.