சென்னை: பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்தார். எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் வீட்டில் ரூ.650 கோடி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமித்ஷாவை நேற்று இரவு ஒன்றரை மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது முன்னாள் அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு குறித்து ஏராளமான ஆவணங்களை காட்டி பேசியதால் அதிர்ச்சியில் உறைந்தனர், பின்னர் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அமித்ஷாவை எதற்காக சந்தித்தேன் என்பது குறித்து தெளிவாக பேட்டி கொடுத்து விட்டேன். கூட்டணி அமைக்கும்போது செய்தியாளர்களை அழைத்து தெரிவிப்பேன். எந்தக் கட்சியும் நிலையான கூட்டணியுடன் இருந்தது இல்லை; அரசியல் சூழலுக்கு ஏற்ப மாறும். 2026ஆம் ஆண்டு NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அமித் ஷாவின் பதிவு அவருடைய கட்சியின் விருப்பமாகும்.
The post பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் எடப்பாடி பழனிசாமி மழுப்பல் appeared first on Dinakaran.