ராணிப்பேட்டை / கோவை: “பாஜக தலைவர் எனக் கூறி நடிகர் (சந்தான பாரதி) படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு ஒட்டியது திமுக” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள ராஜாதித்யா சோழன் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு எழுச்சி விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு இன்று வந்தார். அவரை வரவேற்று ராணிப்பேட்டை, முத்துக்கடை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.