சென்னை: "பாரதிய ஜனதா கட்சி அது தோல்வியைச் சந்திக்கும் என்கிற நிலை உள்ள மாநிலங்களில் எல்லாம் அதன் தொகுதிகளைக் குறைக்க விரும்புகிறது" என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார்.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது, “தாங்கள் வெற்றி பெரும் மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், தோல்வியைச் சந்திக்கும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதே பாகஜவின் நோக்கமாகும்.