பாஜக-தவெக கூட்டணி பேச்சா?- நயினார் நாகேந்திரன் பதில்

3 hours ago 1

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாஜக அமைப்பு செயலாளர் எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதையடுத்து நயினார் நாகேந்திரன் நேற்று மதியம் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது நயினார் நாகேந்திரன் பிரதமருக்கு சால்வை அணிவித்து 'ஜல்லிக்கட்டு' சிலையை பரிசாக வழங்கினார். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்,

பாஜக - தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. நேற்று தான் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துவிட்டு, இன்று அம்மாளை தரிசிக்க வந்துள்ளேன். உங்களை (செய்தியாளர்கள்) சந்திக்கிறேன், நாளை கோட்டையில் சந்திப்போம்.

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் பணியை அவர்கள் ஆரம்பித்து இருக்கலாம்; ஆனால் ஆட்சிக்கு வருவதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article