பாஜக எம்.பி.க்கள் தடியுடன் வந்தனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

4 months ago 23

டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் செல்ல விடாமல் பாஜக எம்.பி.க்கள் எங்களை தடுத்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி மீதான புகாரில் விசாரணை கோரினால், அவையில் அமளியில் ஈடுபட்டு பாஜகவினர் திசை திருப்புகின்றனர். பாஜக அரசியல் சட்டத்துக்கும் எதிரி, அம்பேத்கருக்கும் எதிரி. அம்பேத்கரை அமித்ஷா அவமதித்த சம்பவத்தை பாஜக திசை திருப்ப முயற்சி செய்கிறது. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தனர். பாஜக எம்.பி.க்கள் தடியுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தனர். அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா பதவி விலகியே தீர வேண்டும் என்றும் கூறினார்.

 

The post பாஜக எம்.பி.க்கள் தடியுடன் வந்தனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article