பாக். விமானத்தில் ஒரு சக்கரம் மாயம்

2 hours ago 2

லாகூர்: பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விமானம் ஒரு சக்கரம் மாயமான நிலையில் தரையிறங்கியது.  பாகிஸ்தானின் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விமானம் நேற்று கராச்சியில் இருந்து லாகூருக்கு புறப்பட்டுச்சென்றது. விமானம் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் சக்கரம் ஒன்று காணாமல் போயிருந்தது.

விமானம் சக்கரம் இல்லாமல் கராச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதா அல்லது புறப்படும்போது கழன்று விழுந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சக்கரம் இல்லாததால் விமானம் தரையிறங்கியபோது எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எந்தவித இடையூறும் இன்றி இறங்கினார்கள். விமானத்தின் சக்கரம் திருடப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகின்றது.

The post பாக். விமானத்தில் ஒரு சக்கரம் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article