பஹல்காம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

3 hours ago 2

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் பஹல்காம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரியாஸ் அகமது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அனந்த்நாக் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 5 போலீசாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பஹல்காம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பீர் குல்சார் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article