பழைய வண்ணாரப்பேட்டை கோயில் வளாக 150 வயது ஆலமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

1 month ago 9

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பார்வதி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 150 ஆண்டு கால பழமையான ஆலமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மரத்தின் ஒரு பகுதி மட்டுமே வெட்டப்படும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மணிகண்டன் 3-வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோயிலை இடித்து விட்டு புதிதாக கோயில் கட்ட ரூ.17.30 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்தக் கோயில் வளாகத்தில் தல விருட்சமாக உள்ள 150 ஆண்டு கால பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோயில் பக்தரான ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Read Entire Article