பழுதடைந்த ஏடிஎம் இயந்திரத்தை சரி செய்ய கோரிக்கை

1 week ago 2

 

கூடலூர்: கூடலூரை அடுத்த தேவர்சோலை பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி கிளையில் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் இயந்திரம் கடந்த பல நாட்களாக பழுதடைந்து இயங்காமல் உள்ளது. இதன் காரணமாக இந்த ஏடிஎம் சேவையை பயன்படுத்தும் தேவர்சோலை பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் இந்த வழியாக சென்று வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பிற வாகன ஓட்டிகளும் இந்த ஏடிஎம் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே உடனடியாக பழுதடைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தை சரி செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தேவர்சோலை இந்தியன் வங்கியின் துணை மேலாளரிடம் தேவர் சோலை வியாபார சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் ஒரு வார காலத்திற்குள் இயந்திரத்தை சீரமைக்காவிட்டால் வரும் திங்கட்கிழமை வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

The post பழுதடைந்த ஏடிஎம் இயந்திரத்தை சரி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article