பழநி, பிப். 21: பழநி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது: பழநி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றில் நிலுவை மற்றும் நடப்பாண்டிற்கான கேட்பு தொகையை நகராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தி அதற்கான ரசீது பெற்று கொள்ள வேண்டும்.
வரி செலுத்த தவறினால் கட்டிடங்களில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்தல், நீதிமன்றத்தில் வழக்கு தொடருதல், குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிப்பு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நகராட்சி கடைகளுக்கான மாத வாடகையை நடப்பு மாதம் வரை நிலுவையின்றி செலுத்தி கடையை பூட்டி சீல் வைத்தல் போன்ற நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post பழநியில் வரி செலுத்தா விட்டால் சட்ட நடவடிக்கை appeared first on Dinakaran.