பழநி, பிப். 8: பழநியில் மளிகை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. பழநி அடிவாரம், திருஆவினன்குடி கோயிலின் தெற்கு வாசல் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான மளிகை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இக்கடையில் நேற்று அதிகாலை எதிர்பாரதவிதமாக தீப்பிடித்து மளமளவென பரவி கடை முழுவதும் பற்றி எரிந்தது.
தொடர்ந்து தீ அருகில் உள்ள முஜிபூர் ரகுமான் என்பவருக்கு சொந்தமான டீக்கடையிலும் பற்றியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பழநி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் தீ மேலும் பல கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மளிகை மற்றும் பூஜை பொருட்கள் எரிந்து நாசமாயின.
The post பழநியில் மளிகை கடையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.