பழநி: பழநியிலிருந்து திருப்பதிக்கு தினமும் பேருந்து இயக்க ஆந்திரா போக்குவரத்துக்கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், தனது மகன் அகிரா நந்தனுடன் இன்று வெள்ளிக்கிழமை (பிப்.14) வந்தார். பழநி அடிவாரத்திலிருந்து ரோப் காரில் மலைக்கோயிலுக்கு வந்தார். அங்கு இணை ஆணையர் மாரிமுத்து, துணை முதல்வரைப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.