பழநி கோயில் நிதியிலிருந்து ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி கட்ட தடை கோரி வழக்கு

23 hours ago 3

சென்னை: பழநி கோயில் நிதி​யில் ரூ.20 கோடி செல​விட்டு ஒட்​டன்​சத்​திரத்​தில் கல்​லூரி கட்ட தடை விதிக்​கக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில் நிதி​யில் இருந்து தொப்​பம்​பட்​டி​யில் கட்​டப்​பட்​டுள்ள கல்​லூரியை, ஒட்​டன்​சத்​திரம் அருகே மாற்​றி, பழநி கோயில் நிதியி​லிருந்து ரூ.20 கோடிக்கு மேல் செல​விட்டு நிரந்​தரக் கட்​டிடம் கட்​ட எதிர்ப்​புத் தெரி​வித்​தும், கட்​டு​மான பணி​களுக்கு தடை விதிக்​கக் கோரி​யும் டி.ஆர்​.ரமேஷ் என்​பவர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ் கு​மார், எஸ்​.செளந்​தர் ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் அறநிலை​யத் துறை சார்​பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் அருண் நடராஜனிடம், “அரசுப் பணத்​தில் கல்​லூரி கட்​டு​வ​தாக இருந்​தால் எந்த ஆட்​சேப​மும் இல்​லை. ஆனால், கோயில் நிதி​யில் இவ்​வளவு பெரிய தொகையை எப்​படி எடுக்க முடி​யும்?” என்று கேள்வி எழுப்​பினர். அதற்கு அவர் “தற்​போது டெண்​டர் மட்​டுமே கோரப்​பட்​டுள்​ளது” என்​றார்.

Read Entire Article