சென்னை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நேற்று நடந்த விழாவில், கலைஞர் கைவினை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 8,951 கைவினை தொழில் முனைவோருக்கு ரூ.34 கோடி மானியத்துடன், ரூ.170 கோடிக்கான கடன் ஒப்புதல் ஆணைகளைவழங்கினார். புவிசார் குறியீடு பெறுவதற்கான அரசு மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்பது உட்பட 5 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில், கலைஞர் கைவினை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன் 8,951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன், ரூ.170 கோடிக்கான கடன் ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.