பள்ளிக்கு மது எடுத்து வந்ததாக கூறி - சிறுவனை கண்டிப்பதாக நினைத்து கடுமையாகத் தாக்கிய இளைஞர்கள்..

2 months ago 9
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவன் மதுபாட்டில் வாங்கித் தரச் சொன்னதன் அடிப்படையில் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கடந்த 16ம் தேதி மதுபாட்டிலும் முட்டையும் வாங்கி கொடுத்தாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களுக்கு தெரியவந்த நிலையில், பள்ளி மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த 8ம் வகுப்பு மாணவனைக் கண்டிப்பதாக நினைத்து அவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். யாருக்கு மது வாங்கிக் கொடுத்தாய் எனக் கேட்டும் பள்ளி மாணவர்களுக்கு மது வாங்கி கொடுத்து கெடுக்கிறாய் என்று கூறியும் கடுமையாக தாக்கி அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், சிறுவனின் தாயார் காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தாக்குதல் நடத்திய 4 பேரின் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் நீதிமன்ற ஜாமினில் விடுதலை செய்தனர்.
Read Entire Article