பள்ளி மாணவி கர்ப்பம் 2 வாலிபர்கள் கைது

1 day ago 3

திருமலை: பள்ளி மாணவி கர்ப்பமான வழக்கில், 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது ெசய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வெங்கடகிரியை சேர்ந்தவர் 15 வயதான 10ம் வகுப்பு மாணவி. இவருக்கு கடந்த சில மாதங்களாக உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த அவரது தாய், அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி அதேபகுதியை சேர்ந்த ஷேக் ரப்பானி(38), சீனாபாபு என்கிற பாலு(33) ஆகிய இருவரால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post பள்ளி மாணவி கர்ப்பம் 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article