தர்மபுரி, டிச.5: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள பாப்பம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஜெகதீசன் (14), அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 24ம் தேதி, வீட்டில் இருந்து தந்தையின் டூவீலரில் வெளியே சென்ற ஜெகதீசன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி தாய் லட்சுமி இண்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஜெகதீசன் மாயமான நிலையில், தர்மபுரி மகளிர் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
The post பள்ளி மாணவன் மாயம் appeared first on Dinakaran.