பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பல்லடம் அரசு மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், செஞ்சேரிமலையில் நேரிட்ட விபத்தில் சிக்கிய முதியவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து வரப்பட்டார்.