பலத்த தரைக்காற்று வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

2 months ago 12
புயல் சின்னத்தால், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 28 ஆம் தேதி அன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55  கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் இடையே 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 29 மற்றும் 30ஆம் தேதிகளில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
Read Entire Article