சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி இருந்தார். அப்போது ஆஜரான அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், டிஜிட்டல் ஆவணங்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரல் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த ஆவணங்கள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற வசம் உள்ளதால் அமலாக்கத்துறையால் வழங்க இயலாது எனக்கூறினார். இதையடுத்து, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 16ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
The post பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மனு appeared first on Dinakaran.