பருப்பு சூப்

4 months ago 11

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1/2 கப்
பாசி பருப்பு – 1/4 கப்
தக்காளி – 2 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 2 பல் (நறுக்கியது)
இஞ்சி – 1 சிறிய துண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு (நறுக்கியது)
நெய் அல்லது எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்றாக கழுவி, 15-20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்ததாக தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மசியும் வரை வதக்கவும். ஊறவைத்த பருப்பு, மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2-3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.குக்கரின் அழுத்தம் குறைந்ததும், மூடியைத் திறந்து சூப்பை மசிக்கவும். மத்து அல்லது கரண்டி பயன்படுத்தி மசிக்கலாம் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம். பின்னர், மீண்டும் சூப்பை அடுப்பில் வைத்து, மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். அவ்வளவுதான், சூடான மற்றும் சத்தான பருப்பு சூப் தயார்.

The post பருப்பு சூப் appeared first on Dinakaran.

Read Entire Article