பரமத்தி வேலூரில் விஷ்ணுபதி புண்ணியகால ஆராதனை விழா

3 weeks ago 4

பரமத்தி வேலூரில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ விஷ்ணு வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கு நேற்று (வியாழக்கிழமை) விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்விகள் நடைபெற்று பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது.

காலை 6 மணிக்கு கோ பூஜையும், 7 மணி அளவில் 21 திரவியங்களினால் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சாரத்தி, ஏகாரத்தி, அடுக்க ஆரத்தி உடன் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read Entire Article