மின் துறையில் 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

23 hours ago 4

சென்னை,

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் ( நேர்முகத்தேர்வு இல்லாதது) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழக மின்சாரத்துறை வாரியத்தில் காலியாக உள்ள 416 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள் விவரம் : உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்): 391, உதவி அக்கவுண்ட்ஸ் அலுவலர்: 25

கல்வி தகுதி : துறைசார்ந்த பிரிவில் பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 32- க்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி, எஸ்டி பிரிவினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜூன் 25

தேர்வு முறை : எழுத்து தேர்வு நடைபெறும். நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு அறிவிப்பினை படிக்க : https://tnpsc.gov.in/Document/English/addendum%209A-2025%2011.06.2025.pdf

Read Entire Article