“பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” - ஜி.கே.வாசன்

2 weeks ago 5

சென்னை: பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 12 சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Entire Article