பன்றி வளர்ப்புக் கொள்கை வெளியீடு: தமிழகத்தில் விவசாயிகளுக்கு கடன், மானியம் வழங்க திட்டம்

1 hour ago 2

சென்னை: தமிழகத்தில் பன்றி வளர்க்கும் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கி ஊக்குவித்தல் மற்றும் பன்றிகளின் மரபணு திறனை மேம்படுத்தும் நோக்கங்களுடன் தமிழ்நாடு மாநில பன்றி வளர்ப்புக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: “மாநிலத்தின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பன்றி வளர்ப்பில் தேவையான ஊக்குவிப்பு வழங்க, நன்கு வரையறுக்கப்பட்ட பன்றி வளர்ப்புக் கொள்கை முக்கியமானதாகும். சாதாரணமான பன்றிகளின் மரபணுத்திறனை மேம்படுத்துதல், மேம்பட்ட வகையைச் சேர்ந்த தனிநிலை நாட்டுப்பன்றிகளின் இனப்பெருக்க திசுக்களை பாதுகாத்தல், பராமரித்தல், இனக்கலப்பு வழிமுறையை பின்பற்றி, வழக்கமாக காணப்படும், வளர்க்கப்படும் காட்டுப்பன்றி வகைகளுக்குப்பதில் படிப்படியாக விரும்பிய அளவில் வேற்றினப் பண்புகளை மரபுவழி பெற்று இனக்கலப்பு செய்யப்பட்ட இனப்பெருக்கத் திசுக்களை கொண்டு சாதாரண பன்றிகளை மேம்படுத்துதல், குறைந்த விலை தீவனத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு சொந்தமான இடங்களில் இனக்கலப்பு செய்யப்பட்ட விலங்குகளை பராமரிப்பதை ஊக்குவித்தல் ஆகியவை இதன் பிரதான நோக்கமாகும்.

Read Entire Article