பத்மநாபபுரம் ஆர்டிஒ ஆபீஸில் நவ.12ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

2 months ago 9

நாகர்கோவில், நவ.10: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: பத்மனாபபுரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் குறைதீர்க்கும் முகாம் பத்மனாபபுரம் சார் ஆட்சியர் தலைமையில் வரும் நவம்பர் 12ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகாக்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பத்மநாபபுரம் ஆர்டிஒ ஆபீஸில் நவ.12ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article