பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றினால் கடும் நடவடிக்கை: மருத்துவ கவுன்சில் பதிவாளர் எச்சரிக்கை

4 months ago 13

சென்னை: மருத்துவக் கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள், விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருத்துவக் கவுன்சில் பதிவாளர் டாக்டர் காமராஜ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மருத்துவ அலட்சியம், நெறியற்ற கட்டண விதிப்பு, தொழில்சார்ந்த தவறுகள், முறைகேடுகள் என பல்வேறு புகார்கள் டாக்டர் எஸ்.தினேஷ் (பதிவு எண் 61971) என்பவர் மீது முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் அந்த புகார்களில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டு டாக்டர் தினேஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ஓராண்டுக்கு மருத்துவக் கவுன்சில் பதிவேட்டிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஓராண்டுக்கு அவர் மருத்துவ சேவைகள் ஆற்ற முடியாது. இந்த உத்தரவு நகலினை அனுப்பியபோது, சம்பந்தப்பட்ட முகவரியில் அவர் இல்லை.

Read Entire Article