பண மோசடி வழக்கில் நெல்லை ஓட்டல் உரிமையாளர் கைது பெங்களூரு போலீசார் நடவடிக்கை

1 month ago 6

நெல்லை, ஏப். 18: பண மோசடி வழக்கில் நெல்லை ஓட்டல் உரிமையாளரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் தேவர்குளத்தைச் சேர்ந்தவர் வெற்றி விஜயன் (51). இவர் அந்தப் பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார். பெங்களூருவில் ஒரு தொழிலதிபரிடம் வெற்றி விஜயன் பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வெற்றி விஜயன் மோசடி செய்தது தெரிந்தது. அதனால் நேற்று முன்தினம் பெங்களூரு போலீசார் நெல்லைக்கு வந்தனர். அவர்கள் வெற்றி விஜயனை கைது செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.

The post பண மோசடி வழக்கில் நெல்லை ஓட்டல் உரிமையாளர் கைது பெங்களூரு போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article