சென்னை: பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துவதில்லை என்று தமாகா(மூ) தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. கீழதாயில்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. சுமார் 50 அறைகள் கொண்ட பட்டாசு ஆலையில் 15 அறைகள் சேதமடைந்து, பக்கத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கும் தீ பரவி அங்குள்ள பட்டாசுகளும் வெடித்துச் சிதறியது.