வில்லிபுத்தூர், பிப்.21: திருத்தங்கல் ரயில்வே நிலையத்தில் 2 பேரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருத்தங்கல் ரயில்வே நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டு பேரை அரிவாளால் வெட்டி பணம் பறித்து சென்ற வழக்கில் ஏற்கனவே மூன்று பேரை வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய விஜயபாண்டி என்ற படையப்பா(29) என்பவரை வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது சிவகாசி மற்றும் திருத்தங்கல் காவல் நிலையத்தில் பல்
வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ‘படையப்பா’ கைது appeared first on Dinakaran.