சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் ரூ. 256.45 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 230/110கி. வோ. துணை மின்நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்குமாறு, மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் ரூ. 256.45 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக 230/110கி. வோ. துணை மின்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு வலியுறுத்தினார்.