
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கக்கர் கிராமத்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை கண்டுபிடித்தனர்.
அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 கிலோ எடையுள்ள ஹெராயின் மற்றும் 900 கிராம் எடையுள்ள மற்றொரு போதைப்பொருளையும் போலீசார் மீட்டனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமந்தீப் சிங்கைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.