பஞ்சாப் : பஞ்சாப் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம் செய்துள்ளது. எல்லைப் பகுதிகளுக்கு 10 அமைச்சர்களை அனுப்ப பஞ்சாப் அரசு ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர்கள் லால் சந்த் கட்டாருசக் மற்றும் டாக்டர் ரவ்ஜோத் சிங் ஆகியோர் குர்தாஸ்பூர் எல்லைக்கு செல்கின்றனர். அமைச்சர்கள் குல்தீப் தலிவால் மற்றும் மொஹிந்தர் பகத் ஆகியோர் அமிர்தசரஸ் பகுதிக்கு செல்கின்றனர். இந்தியா – பாக். இடையே தொடர் தாக்குதல் நடந்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
The post பஞ்சாப் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம் appeared first on Dinakaran.