பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலி

4 hours ago 2

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங், நிந்தர் கவுர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பராப்ஜீத் சிங் தான் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அமிர்தசரஸ் துணை கமிஷனர் சாக்ஷி சாவ்னி கூறியதாவது:-

பஞ்சாப் மாநிலத்தின் பங்கலி, பாதல்புரி, மராரி கலான், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்றிரவு எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து டாக்டர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். இதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article