நோயாளிக்கு காகிதத்தில் ‘எக்ஸ் ரே’ பிரின்ட் கொடுத்ததாக புகார் - தென்காசி அரசு மருத்துவமனை விளக்கம்

6 months ago 21

தென்காசி: தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காகிதத்தில் ‘எக்ஸ் ரே’ பிரின்ட் கொடுத்ததாக புகார் எழுந்திருக்கும் நிலையில், இச்சம்பவம் குறித்து மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த காளிப்பாண்டி என்பவருக்கு இருசக்கர வாகன விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ் ரே எடுக்கப்பட்ட நிலையில், எக்ஸ் ரே பிரின்டை காகிதத்தில் அளித்துள்ளனர். இதையடுத்து மருத்துவரை சந்திக்க சென்றபோது, மருத்துவர் இல்லாதால் அதிருப்தியடைந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

Read Entire Article