நொச்சிவயல் மக்கள் கலெக்டரிடம் மனு

4 months ago 13

 

ராமநாதபுரம், ஜன. 10: ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல், நொச்சிவயல் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது: ராமநாதபுரம் நகராட்சியுடன் அச்சுந்தன்வயல் ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நூறு நாள் வேலை இல்லாமை, அரசு திட்ட உதவிகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைப்பதை தவிர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post நொச்சிவயல் மக்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article