முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபி, நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கடந்த 18-ம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூருன்னிஷா என்பவரை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.