
நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இலந்தைகுளம், வேதகோவில் தெருவை சேர்ந்த பிச்சையா (வயது 53) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 6 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அந்த நபருக்கு தென்காசி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் பிச்சையாவை பாப்பாக்குடி போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று (10.5.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.