நெல்லை அருகே கொலை முயற்சி வழக்கில் ஓராண்டாக தலைமறைவானவர் கைது

2 months ago 6

நெல்லை, டிச.4: சீதபற்பநல்லூர் அருகேயுள்ள புதூர், வடக்கு தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (44). இவர் கடந்த 2022ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் இவ்வழக்கு தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனையறிந்த தென்காசி நீதிமன்றம் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post நெல்லை அருகே கொலை முயற்சி வழக்கில் ஓராண்டாக தலைமறைவானவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article