உதகை: நீலகிரி திமுக மாவட்ட செயலாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எம்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் கோலோச்சியது, வாரிசை வளர்த்தது, பொறுப்பு அமைச்சருடன் முரண்பட்டது என தொடர் காரணங்களால் பா.மு.முபாரக் மாற்றப்பட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி திமுகவில் முன்னாள் அமைச்சர் க.ராமசந்திரன் மற்றும் தேர்தல் பணிக்குழு செயலர் பா.மு.முபாரக் ஆகியோர் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் 70 வயதை தாண்டிய நிலையில், இளம் ரத்தத்தை கட்சிக்கு பாய்ச்ச வேண்டும் என கோரிக்கைகள் பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. இருவரிடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்தது. தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையிலேயே செயல்பட்டு வந்தனர்.